5. நடுகற் காதை

65

ஆங்கவ டன்னுடன் அணிமணி யரங்கம்
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித்


65
உரை
66

       ஆங்கு அவள் தன்னுடன் அணிமணி அரங்கம் வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி - அங்ஙனமாக வந்த அப் பெருந்தேவியுடனே அழகிய மணிகள் பதித்த நிலா முற்றத்தின் கண்ணே கடல் சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் செங்குட்டுவன் அமர்ந்து;

       அவள் - வதுவை வேண்மாள். வதுவை வேண்மாள் மதிகாணிய வரும் வழி பரத்தல் முதலிய நிகழாநிற்க வந்த அவள்தன்னுடன் ஆள்வோன் ஏறி என்க. வீங்குநீர் - கடல்.