5. நடுகற் காதை


10

போந்தைக் கண்ணிப் பொல்ம்பூந் தெரியல்
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர்


9
உரை
10

       போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல் - பனம்பூ மாலையினையும் பொன்னாற்செய்த தும்பைப் பூமாலையினையும் சூடிய, வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் - தம் மன்னனது போர்த்தொழிலை முடித்த ஏந்திய வாளின் வெற்றியினையுடைய வீரர்கள் ;

       முன்னர் 1"தோடார் போந்தை தும்பையொடு முடித்த" என்றாராகலானும் 2"பொலம்பூந் தும்பை" என்பவாகலானும் பொலம்பூந் தெரியல் என்பதற்குப் பொன்னாற் செய்த தும்பை மலர்மாலையென உரைக்கப்பட்டது ; தும்பையுடன் வாகை மாலையும் கொள்ளுதலுமாம்.


1. சிலப், 27 ; 45. 2. புறம். 1.