|
90
95
|
நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு
வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக்
கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்
சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை
|
|
நீள்அமர்
அழுவத்து நெடும்பேர் ஆண்மையொடு - பெரிய போர்க்களப் பரப்பிலே மிக்க பெரிய வீரத்தோடே,
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து - தாம் கொணர்ந்த வாளினையுங் குடையினையும் போர்களத்தே
போகட்டு, கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை - (பகைவர்) கொல்லுதற்கு ஒருப்படாத
தவ வடிவோடே உயிர் பிழைத்த பகை மன்னரை, வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று என
- வெல்லும் போரினிடத்துப் பிடித்துக் கோடல் வெற்றிச் செயலன்று என்று, தலைத்தேர்த்
தானைத் தலைவற்கு உரைத்தனன் சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை - இந்திரவிற்போலும்
மாலையை அணிந்த மார்பினையுடைய சோழர் பெருமான் முதன்மைபெற்ற தேர்ப்படையினையுடைய
மன்னனுக்குக் கூறினான்;
நெடும் பேராண்மையொடு என்பது இகழ்ச்சிக்குறிப்பு.
முனிவரைக் கோறல் முறையன்று என்பதுணர்ந்து, இவர் தவவேடங் கோடலால், கொல்லாக் கோலத்
துயிருய்ந்தோர் எனக் கூறினார். முன்னர், 1"தாபத
வேடத் துயிருய்ந்து பிழைத்த, மாபெருந் தானை மன்னகுமரர்" என வந்தமை காண்க, வெற்றம்
- வெற்றி. தலைவற்கு - நினக்கு; முன்னிலையிற் படர்க்கை. உரைத்தல் - உரைப்பித்தல்.
செம்பியர் பெருந்தகை உயிருய்ந்தோரைக் கோடல் வெற்ற மன்றென உரைத்தனன் என முடிவு
செய்க.
|
1.
சிலப். 27 ; 179-80.
|
|