|
110
|
தாமரைச் செங்கண் தழனிறங்
கொள்ளக்
கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே
வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக்
|
|
தாமரைச்
செங்கண் தழல் நிறங்கொள்ள - தாமரை மலர்போலுஞ் சிவந்த கண்கள் சிவப்பேற, கோமகன்
நகுதலும்- செங்குட்டுவன் வெகுண்டு நகைத்த அளவிலே, குறையாக் கேள்வி மாடலன் எழுந்து -
குறைவில்லாத நூற்கேள்வியினையுடைய மாடலன் எழுந்து நின்று, மன்னவர் மன்னே வாழ்க நின்கொற்றம்
வாழ்கென்று ஏத்தி - அரசர்க்கரசே நினது வெற்றி வாழ்வதாக நீ நீடு வாழ்வாயாக வென்று
போற்றி;
அருளாற் செம்மையுடைய கண்கள் வெகுளியாற்
சிவந்தன என்றார். |
|