5. நடுகற் காதை


நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்


137
உரை
138

       நான்மறையாளன் செய்யுட்கொண்டு-நான்மறையோதும் அந்தணனாகிய புலவன் பாடிய செய்யுளை ஏற்று, மேல்நிலை யுலகம் விடுத்தோன் ஆயினும்-அவனைத் துறக்கவுலகத்துச் செலுத்தியோனும்;

       நான்மறையாளன்- பாலைக்கௌதமனார் என்னும் புலவர்; மேனிலையுலகம் விடுத்தோன் - இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன்; இவ்வரலாற்றினை, 1"பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார். பத்துப்பாட்டு; பாடிப் பெற்ற பரிசில்; நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பாரப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டுமெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையுங் காணாராயினார்" என்பதனானறிக.


1. பதிற். 3 ; பதிகம்.