|
140
|
விடர்ச்சிலை பொறித்த
விறலோ னாயினும்
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும்
|
|
போற்றி
மன்னுயிர் முறையிற் கொள்கென - நிலை பெற்ற உயிர்களை முறையின்றிக் கவர்தலைப் பரிகரித்து
மூத்த முறைமையானே கொள்வாயாகவென, கூற்றுவரை நிறுத்த கொற்றவனாயினும் - இயமனை ஓர்
எல்லையுட்படுத்திய மன்னவனும்;
1"தவத்துறை
மாக்கள் மிகப்பெருஞ் செல்வ, ரீற்றிளம் பெண்டிராற்றாப் பாலகர், முதியோ ரென்னா
னிளையோ ரென்னான், கொடுந் தொழி லாளன் கொன்றனன்" குவித்தலானே இங்ஙனம் அவனை
வரைப்படுத்தான் என்க.
|
1.
மணி. 6 ; 97-100.
|
|