5. நடுகற் காதை

145

உருகெழு மரபின் அயிரை மண்ணி
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்


145
உரை
146

       உருகெழு மரபின் அயிரை மண்ணி-உட்குப் பொருந்தும் முறைமையினையுடைய அயிரை மலையிற் கொற்றவையென்னுந் தெய்வத்தை நீராட்டி வழிபட்டு, இருகடல் நீரும் ஆடினோன் ஆயினும்-ஒரு பகலில் இரு கடல்நீரையும் கொணர்வித்து முழுகினோனும்;

       அயிரை - சேரநாட்டுள்ளதோர் மலை; ஈண்டு அதன்கணுள்ள தெய்வத்தை யுணர்த்திற்று. மண்ணுதல் - திருமுழுக்குச் செய்வித்தல். இருகடல் - தன்னதாய மேல் கடலும், வேற்றுவேந்தனதாய்த் தன்னால் வெல்லப்பட்ட நாட்டிற் கீழ் கடலுமாம்; 1"இருகட னீரு மொருபக லாடி, அயிரை பரைஇ" என்பதும், அதனுரையுங் காண்க. அயிரை - ஓர் யாறு என்பர் அரும்பதவுரையாசிரியர்.


1. பதிற், 3. பதிகம்.