5. நடுகற் காதை



சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்


147
உரை
148

       சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து-சதுக்கப் பூதங்களை அமராபதியினின்றும், வஞ்சி நகரத்துக் கொணர்ந்து, மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் - சோம யாகத்தினைச் செய்தோனும் ஆகிய;

       ஆயினும் என்பது ஓரெண்ணிடைச்சொல்; 1"அருந்தவர்க்காயிலு மரசர்க்காயினும்" என்புழிப் போல. சோமயாகஞ் செய்தோன் சோமயாஜி எனப்படுவன்.


1. மணி, 6 ; 54;