|
155
|
இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு
உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே
நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை
|
|
இளமை
நில்லாது என்பதை - இளமைப் பருவம் நிலையாது என்பதனை, எடுத்து ஈங்கு உணர்வுடை மாக்கள்
உரைக்கல் வேண்டா - இவ்வுலகத்து அறிவுடைய மக்கள் மேற் கோள் வாயிலாக எடுத்துரைத்தல்
வேண்டா , திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே - திருமகள் தங்கிய பரந்த மார்பினையும்
செங்கோலையும் உடைய வேந்தனே, நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை - நரைத்தலோடு முதிர்ந்த
உடலை நீயும் பார்த்தனை ;
ஞெமிர்தல் - பரத்தல். நீயுங் கண்டனையாகலான்
உரைக்கல் வேண்டா என்க. நீயுங் கண்டனை என்றது நின் உடம்பும் நரைத்தலுடன் முதிர்ந்த
தென்றபடி. நரைமுதிர் - நரைமிக்க என்றுமாம். 'கடற்கடம் பெறிந்த காவலனாயினும்' என்பது
தொடங்கி. 'நரை முதிர் யாக்கை நீயுங் கண்டனை' எனபதன்காறும் யாக்கையும் செல்வமும்
இளமையும் நில்லாவென்பது சான்றுகாட்டி நிறுவப்பட்டது. |
|