|
20
|
அகிலுண விரித்த அம்மென்
கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும்
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த
|
|
அகில்
உண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை - அகிற் புகையினைக் கொள்ள விரித்த அழகிய
மெல்லிய கூந்தலாகிய மேகத்தின் உள்ளே தோன்றும், மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் -
முகமாகிய மதியினிடத்துள்ள புருவமாகிய வளைந்த கரிய வில்லின்கீழ் அமைந்த, மகரக்கொடியோன்
மலர்க்கணை துரந்து - மகரமீனைக் கொடியாகவுடைய மன்மதனது மலரம்பு களையோட்டி, சிதர்அரி
பரந்த செழுங்கடைத் தூது - சிதறிய செவ்வரி பரந்த கொழுவிய கண்ணின் கடையாகிய தூது,
மருந்தும் ஆயது இம் மாலை என்று ஏத்த - முன்னர்ப் பாசறைக்கண் நமக்கு வருத்தஞ் செய்ததேயன்றி
இம் மாலையில் அதற்கு மருந்தும் ஆகியது என்று புகழ ;
கூந்தன் முகில், முகமதியம், புருவவில்
எனுமிவை உருவகம். மலர்க்கணை துரந்து என்றது ஆடவரை வருத்துந் தொழிலால் அதனை வென்று
என்றபடி. கண்ணென்பது வருவித்துச் சிலைக்கீழ் அமைந்த அரிபரந்த கண்ணின் கடையாகிய
தூது என்க. கட்கடை - கடைக்கண்ணி னோக்கம் ; அந்நோக்கங் கண்டு சேறலின் அதனைத்
தூது என்றார். பாசறைக்கண் உருவெளியாகத் தோன்றித் துன்புறுத்தியதாகலின், ஈண்டு மருந்துமாயது
என்றார். 1"பிணியுமதற்கு மருந்தும்"
என்பதுங் காண்க. உம்மை எச்சவும்மை. வாள்வலத்தர் தம் மார்பினை வரிமுலையால் வேதுகொண்டு
செழுங்கடைத் தூதும் மருந்தும் ஆயதென்று ஏத்த என்க.
|
1.
திருச்சிற். 5.
|
|