5. நடுகற் காதை


170

எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே


169
உரை
170

       எழுமுடி மார்பநீ ஏந்திய திகிரி - ஏழு முடிகளாற் செய்த ஆரம் பொருந்து மார்பினையுடையாய் நீ எடுத்த ஆணைச் சக்கரம், வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே - வெற்றிகாணும் வாளினையுடைய அரசே மேலும் மேலுஞ் சிறப்புறுவதாக;

"எழுமுடி என்பது ஏழு அரசரை வென்று அவர்கள் ஏழுமுடி யானுஞ் செய்ததோராரமாம்" என்பர் பதிற்றுப்பத்தின் பழைய வுரையாசிரியர். 1"எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை" என்பதன் உரை காண்க.


1. பதிற். 14.