வானவர்
போற்றும் வழி நினக்கு அளிக்கும் - விண்ணவர் புகழும் வீட்டு நெறியினை உனக்குத் தருகின்ற,
நான் மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் - நான்கு வேதங்களிற் கூறப்படும் வேள்வியினைச்
செய்யும் அந்தணர் கொண்டு, அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி
நீ செயல் வேண்டும் - அரிய மறைகளிடத்தே மன்னர்க்கென வுரைத்த உயர்ந்த நல்ல வேள்வியினை
நீ செய்தல் வேண்டும்;
வானவர் போற்றும் வழி - வீட்டு
நெறி. அளிக்கும் வேள்வி யென இயையும்; அளிக்கும் வேள்விப் பார்ப்பான் என்பாருமுளர்.
அரசர்க்கு ஓங்கிய வேள்வி - இராசசூயம், பரிவேள்வி முதலியன. பார்ப்பானைக் கொண்டு
என ஒரு சொல் வருவித்துரைக்க. அருமறை-ஓதவும் உணரவும் அரிய மறை.
|