5. நடுகற் காதை


180

நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும்
இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவது மில்லை,


179
உரை
182

       நாளைச் செய்குவம் அறம் எனின் - அடுத்த நாளில் அறஞ்செய்வோம் என்று நாம் கருதின், இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் - இற்றைப் பொழுதிலேயே கேள்வி யளவேயான நல்ல உயிரானது விலகினும் விலகும், இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை - தம் வாழ்நாள் இத்துணைத்தென வரையறை செய்து அறிந்தவர் கடல்சூழ்ந்த உலகத்தின்கண் யாங்கணும் இல்லை;

       நாளை என்பது வருங்கால மென்னும் பொருட்டு. யாக்கை நிலை யாமையின், இன்றே அறஞ்செய்கவெனக் கூறினான். பிறரும் 1"புன்னுனிமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி, இன்னினியே செய்க அறவினை - இன்னினியே, நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேளலறச், சென்றா னெனப்படுத லான்" எனக் கூறுமாறு காண்க.


1. நாலடி. 3 : 9.