5. நடுகற் காதை



185

வேள்விக் கிழத்தி யிவளொடுங் கூடித்
தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற
ஊழியோ டூழி யுலகங் காத்து
நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று
மறையோன் மறைநா வுழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்


183
உரை
188

       வேள்விக் கிழத்தி இவளொடுங் கூடி - வதுவைக் கிழத்தியாகிய இவளோடுங் கலந்து, தாழ் கழல் மன்னர் நின் னடிபோற்ற - கழலணிந்த அரசர்கள் நினது அடியினைத் துதிக்க, ஊழியோடு ஊழி உலகங் காத்து நீடுவாழியரோ நெடுந்தகையென்று - பல்லூழி இவ்வுலகினைக் காத்து நெடுந்தகாய் நீடு வாழ்வாயாக என, மறையோன் மறைநா உழுது - மாடலனாகிய அந்தணன் மறையோதும் நாவாகிய ஏரானே உழுது, வான்பொருள் - சிறந்த பொருளாகிய விதையினை, இறையோன் செவி செறுவாக வித்தலின் - மன்னனது செவியே வயலாகக் கொண்டு விதைத்தலான்;

       வேள்வி - மன்றல் வேள்வி. இனி, வேள்விக்கிழத்தி என்பதற்கு வேள்வி செய்தற்கண் உடனிருக்கு முரிமையுடையாள் எனலும் பொருந்தும். தாழ்தல் - தங்குதல்; தாழும் மன்னர் என்றியைத்தலுமாம். ஊழியோடூழி - பல்லூழி. நாவாகிய ஏரால் எனவும், பொருளாகிய விதையை எனவும் உருவகத்தை விரித்துரைக்க.