ஆரிய
அரசரை அருஞ்சிறை நீக்கி - ஆரிய மன்னரைப் பெயர்தற்கரிய சிறையினின்று விடுத்து,
பேர் இசை வஞ்சி மூதூர்ப்புறத்து - பெரும்புகழ் பரந்த வஞ்சி நகரின் புறத்தே, தாழ்நீர்
வேலித் தண்மலர்ப் பூம் பொழில் - ஆழ்ந்த நீரை வேலி யாகவுடைய தண்ணிய பொலிவுற்ற
பூஞ்சோலைக்கண் உள்ள வேள் ஆவிக்கோ மாளிகை காட்டி - வேளாகிய ஆவிக்கோவின் பெயர்
பொருந்திய மாளிகையை அவர்கள் இருக்குமாறு காட்டி , நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள்
- நல்ல பெரிய யாகத்தினை முடித்த பிற்றை நாளில், தம் பெரு நெடுநகர்ச் சார்வதுஞ்
சொல்லி - அவர் தமது பெரிய நீண்ட நகரத்தினை அடைவதுங் கூறி, அம் மன்னவர்க்கு ஏற்பன
செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி - அவ்வாரிய வரசர்க்கு ஏற்ற தகவுகளை
நீ செய்வாயாகவென்று வில்லவன் கோதையை மகிழ்ச்சியோடே ஏவி;
வேளாவிக்கோ மாளிகை - வேளாகிய
ஆவிக்கோவின் பெயராற் கட்டப்பட்ட மாளிகை; இது வேண்மாடம் எனவும் படும்; இது விருந்தின்
மன்னர் தங்குதற்கமைத்த மாளிகை போலும்? நீக்கிக் காட்டிச் சொல்லி நீ ஏற்பன
செய்கவென வில்லவன் கோதையை ஏவி யென்க.
|