5. நடுகற் காதை




210

அருந்திற லரசர் முறைசெயி னல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின்
ஆர்புனை சென்னி யரசற் களித்துச்


207
உரை
211

       அருந்திறல் அரசர் முறை செயின் அல்லது - அரிய வலியினையுடைய மன்னர் தம் நீதி செலுத்தினல்லது. பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது என - பெரும்புகழினையுடைய மகளிர்க்குக் கற்புநிலை சிறப்புறாது என்று, பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை - பண்டைப் பெரியோர் கூறிய இனிய தமிழ்நாட்டு நன்மொழியை, பார் தொழுது ஏத்தும் பத்தினியாகலின் - இவ்வுலகோர் வணங்கிப் போற்றற்குரிய கற்புடையாளாகலான், ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து - ஆத்திமாலை சூடிய சோழ மன்னனுக்கு ஈந்து;

       முறை செய்தல் - ஒழுக்கத்தினும் வழக்கினும் இழுக்கினாரை யொறுத்தல். அரசன் காவ லில்வழி பெண்டிர் கற்புச் சிறவாது என்பதனை, 1"மாதவர் நோன்பும் மடவார் கற்புங், காவலன் காவலின்றெனி னின்றால்" என்பதனானறிக. சென்னி-சோழன்; ஆர்புனை சென்னி என்பதற்கு ஆத்திமாலை புனைந்தமுடி எனலும் அமையும். பத்தினியாகலின் பண்டையோருரைத்த நல்லுரையை அரசற்களித்து என்க. அளித்தல் - அறியும்படி செய்தல்; கோவலன் ஒழுக்கத்தின் வழுவினமையால் பத்தினிக் குண்டாகிய துன்பம் கருதப்பட்டது.


1. மணி. 22 : 208 - 9.