மதுரை
மூதூர் மாநகர் கேடுற - பழம்பதியாகிய மதுரைப் பெருநகர் அழிவுற, கொதியழற் சீற்றம்
கொங்கையின் விளைத்து - தன் சினத்தானே வெவ்விய எரியினை முலைக் கண் தோற்றுவித்து,
நன்னாடு அணைந்து நளிர்சினை வேங்கைப் பொன் அணி புதுரிழற் பொருந்திய நங்கையை -
நமது நல்ல நாட்டினை அடைந்து குளிர்ந்த கிளையினையுடைய வேங்கையின் பொன்போலும் அழகு
செய்யும் புதிய நீழலில் தங்கிய மகளை;
1"கொதியழற்
சீற்றங் கொங்கையின் விளைத்தோய்" என்றார் பதிகத்தும். பொன்போலும் புதிய மலரையணிந்த
வேங்கையென்றுமாம்.
|