6. வாழ்த்துக் காதை



12.

   ஆயத்தார் சொல்

வானவ னெங்கோ மகளென்றாம் வையையார்
கோனவன்றான் பெற்ற கொடியென்றாள்-வானவனை
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்;



12
உரை
12

''வானவனெங்கோ . . . மகள்''

        வானவன் எங்கோ மகள் என்றாம் - சேரனாகிய எம் அரசனுடைய புதல்வியென்று கூறினேம் நாம், வையையார்கோன் அவன்றான் பெற்ற கொடி என்றாள் - அவள்தான் பாண்டியன் பெற்ற மகள் என்றாள், வானவனை வாழ்த்துவோம் நாம் ஆக - நாம் நம்மரசனாகிய சேரனை வாழ்த்துவோமாக, வையையார் கோமானை வாழ்த்துவாள் தேவமகள் - தெய்வமாகிய கண்ணகி பாண்டியனை வாழ்த்தாநிற்பள்;

       
கோனாகிய அவன் என்க. நாம் வாழ்த்துவோமாக எனப் பிரித் துக் கூட்டுக. சேரன் பிரதிட்டித்தமையால் ''எங்கோ மகளென் றாம்'' என்று கூறினார். தேவமகள் வாழ்த்துவாளாக நாம் வாழ்த்து வோம் எனலுமாம்.