''தொல்லை
. . . தொல் குலமே''
தொல்லை
வினையால் துயருழந்தாள் கண்ணின் நீர் கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ
- முன்னைத் தீவினை காரணமாகத் துன்பமுழந்த கண்ணகியின் கண்ணினின்றொழு கும் நீர்
கொல்லத் தன் உயிரையிழந்த மன்னர் மன்னன் வாழ் வானாக, வாழியரோ வாழி வருபுனல்
நீர் வையை சூழும் மதுரை யார் கோமான்றன் தொல்குலமே-எஞ்ஞான்றும் வற்றா தொழுகும்
நீரினையுடைய வையையாறு சூழ்ந்த மதுரைப் பதியார்க் கரசனது தொன்றுதொட்டு வருங் குலம்
நீடு வாழ்வதாக;
கண்ணினீர்
கொல்ல வுயிர் கொடுத்த என்றது அவளுற்ற துயரினைப் பொறாது இறந்ததனை; 1
''கண்ணகி தன் கண்ணீர் கண்டு மண்ணரசர் பெருந் தோன்ற லுண்ணீரற் றுயிரிழந்தமை''
என முன்னர்க் கூறியதுங் காண்க. தொல்குலம்-படைப்புக் காலந்தொட்டு வருங் குலம்; 2
''வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண் பிற் றலைப்பிரித லின்று'' என்னுங்
குறளுரையிற் பழங்குடி என்பதற்குச் சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந்
தொடங்கி மேம்பட்டு வருங் குடி எனப் பரிமேலழகர் உரைத்தமை காண்க.
|