''புறவுநிறை
. . . அம்மானை''
புறவு நிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார்
அம்மானை-புறா வொன்றன் பொருட்டுத துலாத்தின்கண் ஏறி விண்ணவர் போற்றத் தன் உடம்பினை
அரிந்த மன்னவன் யார், குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த கறவை முறை
செய்த காவலன்காண் அம்மானை - தன்னுடம்பினை யரிந்த மன்னவன் யாவனென்னின் வாயிலின்
முன்வந்த ஆவின் பொருட்டுத் தன் மகன்மீது தேர்க் காலைச் செலுத்தி முறை செய்த வேந்தனான்,காவலன்
பூம் புகார் பாடேலோர் அம்மானை-அத்தகைய மன்னனது பொலிவு பெற்ற புகார் நகரினைப்
புகழ்ந்து பாடுக;
குறைவுஇல்
உடம்பு-அரச இலக்கணத்திற் குறைவு படாத உடம்பு. புறவு நிறை புக்கதனையும் கறவை முறை செய்ததனையும்
முன்னர் 1 வழக்குரை காதையில் உரைத்தமையுங்
காண்க.
|