''கடவரைகள்
. . . அம்மானை''
கடவரைகள் ஓர் எட்டும் கண்ணிமையா
காண வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை - திசை யானைகள் எட்டும்
தம் கண் இமைக்கப் பெறாதனவாய் வெருவிப் பார்க்க இமயமலை நெற்றியில் நீண்ட புலியினை
எழுதியோன் யார், வட வரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் குடைநிழலில்
கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை - இமயமலையில் நீண்ட புலியினைப் பொறித்தோன்
எட்டுத் திக்குகளையும் தம் குடை நிழலில் வைத்துக் காத்த மன்னனாவான், கொற்றவன்
றன் பூம்புகார் பாடேலோர் அம்மானை - அத்தகைய மன்னனது பொலிவுற்ற புகார் நகரினைப்
புகழ்ந்து பாடுக;
கடவரை - மதமலை; யானை; வெளிப்படை.
|