6. வாழ்த்துக் காதை



22.

  

துன்னிவந்து கைத்தலத் திருந்ததில்லை நீணிலந்
தன்னினின்று மந்தரத் தெழுந்ததில்லை தானெனத்
தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே;



22
உரை
22

''துன்னி வந்து . . . பந்தடித்துமே''

        துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள்நிலந் தன்னில் நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என - அணுகிவந்து கையிடத்திருந்தது மில்லை நிலத்தினின்றும் வானத்து எழுந்த தும் இல்லை என்று கூறும் வண்ணம், தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே - பாண்டியன் வாழ்வானாக வென்று கூறிச் சென்று பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்களது ஆரம்பூண்ட மார்பினை யுடையான் வாழ்வானாகவென்று கூறிப் பந்தடிப்போம்;

       
கைத்தலத் திருந்ததில்லை. நீணிலந்தன்னி னின்று மெழுந்ததில்லை என்றது விரைவுபற்றி என்க. இல்லை இல்லையெனச் சென்று பந்தடித்தும் என்க.