''வன்சொல் . . . ஊசல்''
வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி ஆண்ட - கொடுஞ் சொல்லினையுடைய யவனரது வளமிக்க நாட்டினையும் இமயமலையினையும்
தென் குமரியையும் ஆண்ட, செரு வில் கயல் புலியான் - போர்க்குரிய வில் கயல் புலி
இவற்றை யுடையனாய, மன்பதை காக்குங் கோமான் மன்னன் திறம் பாடி மின் செய் இடை
நுடங்க ஆடாமோ ஊசல் - குடிகளைப் புரக்குந் தலைவனாகிய சேரவரசனது பண்புகளைப் புகழ்ந்து
மின்போன்ற இடை துவள ஊசல் ஆடுவோம், விறல் விற் பொறி பாடி ஆடாமோ ஊசல் - வெற்றி
பொருந்திய வில் இலச்சினையைப் புகழ்ந்து ஊசல் ஆடுவோம்;
1
''வன்சொல் யவனர் வளநாடாண்டு'' என முன்னருங் கூறினார். 2
'' நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து'' என்பதுங் காண்க. மூவேந்தருள் ஒருவன் பெருமை
கூறுமிடத்து ஏனையிருவருடைய கொடியையும் இலச்சினையையும் அவனுக்கேற்றி யுரைத்தல் வழக்கு;
3''தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற
கயற்புலி, மண்டலை யேற்ற வரைக'' என முன்னர்க் கூறினமையுங் காண்க..
|