''சந்துரல் . . . பாடல்''
சந்து உரல்பெய்து தகைசால் அணிமுத்தம் வஞ்சிமகளிர் குறுவரே வான் கோட்டால்-தகுதி
மிக்க அழகிய முத்தினைச் சந்தனமரத் தாலாய உரலிற் போகட்டுச் சிறந்த யானைக் கொம்பினாற்
குற்றுவாராய
வஞ்சிநகரத்து மங்கையர், கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை படர்ந்த
நிலம் போர்த்த பாடலே பாடல் - பகைவரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் மாலையை
யணிந்த சேர மன்னனது கடம்பின் முதலைத் துமித்த பரந்த இவ்வுலகினை மூடிய மொழியினைப்
பாடும் பாடலே சிறப்புடைப் பாடல், பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல் - உள்ளத்தினை
ஈர்க்கும் பனந்தோட்டினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடல்;
முத்தம்
பெய்து கோட்டாற் குறுவர் மகளிர் எனக் கூட்டுக. தார் - தூசிப்படையுமாம். சேரனது வார்த்தை;
அது கடம்பு எறிந்த வார்த்தை நிலம் போர்த்த வார்த்தை என்க; வார்த்தை - புகழ்;
1 ''மண்டேய்த்த புகழினான்'' என்பதும்
அதன் உரையும் நோக்குக. மலைவளங் கூறியவாறு. முத்தம் மூன்று நிலத்தினும் உளதாதல் ஓர்க..
|