"செய்தவ
மில்லாதேன் . . . தோழீ"
செய்தவம் இல்லாதேன் தீக்கனாக்
கேட்ட நாள் - முன்னை அறஞ் செய்திலேனாகிய யான் தீய கனவினை நீயுரைக்கக் கேட்ட
அந்நாளில், எய்த வுணராது இருந்தேன் மற்று என் செய்தேன் - பொருந்த அறியாதே யிருந்த
யான் என்ன தவறிழைத்தேன், மொய் குழல் மங்கை முலைப்பூசல் கேட்ட நாள் - செறிந்த
கூந் தலையுடைய நங்கையின் முலையாற் செய்த பூசலைக் கேட்ட, நாளில், அவ்வை உயிர்
வீவுங் கேட்டாயோ தோழீ - தோழீ தாய் உயிர் நீத்ததனைக் கேட்டாயோ, அம்மாமி
தன் வீவுங் கேட்டாயோ தோழி - அம்மாமியின் இறப்பினையும் கேட்ட னையோ;
தீக்கனாக்
கேட்டதனைக் 1 கனாத்திற முரைத்த
காதையிற் காண்க. மங்கை, முன்னிலை. முலைப்பூசல் - மதுரையை எரித்தமை. அவ்வை - கண்ணகியின்
தாய். அம்மாமி - மாமன் மனைவி; கோவலன்றாய்.
|