"கோவலன்றன்னை
. . . கேட்டாயோ வன்னை"
கோவலன் றன்னைக் குறுமகன் கோள்
இழைப்ப - கோவலனைக் கீழோனாய் பொற்கொல்லன் தவற்றினைச் செய்ய அதனானே, காவலன்
தன்னுயிர் நீத்ததுதான் கேட்டு ஏங்கி-பாண்டியன் தனது உயிர் விட்டமையைக் கேள்வியுற்று
ஏக்கங்கொண்டு, சாவதுதான் வாழ்வு என்று- இவ் வாழ்க்கை கெடுவதாக வென்று கூறி, தானம்
பலசெய்து மாசாத்துவான் துறவும்கேட் டாயோ அன்னை - பல தானங்களைச் செய்து மாசாத்துவான்
துறவு பூண்டதனையும் அன்னாய் கேட்டனையோ, மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ அன்னை
- மாநாய்கன் துறவினையும் அன்னாய் கேட்டனையோ;
கோள் - தவறு, கொலை, வாழ்வு சாவதுதான் என்க. 1
"அன்னை யென்னை யென்றலு முளவே" என்பதனாற் செவிலி கண்ணகியை அன்னை யென்றாள், இனி,
தெய்வமாகி நிற்குமுறை நோக்கி இங்ஙனங் கூறினாளெனினும் அமையும்.
|