"காதலன்றன்
. . . கேட்டாயோ தோழீ"
காதலன் தன் வீவும் காதலி நீ
பட்டதூஉம் ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையுங் கேட்டு ஏங்கி - காதலனாய கோவலனது இறப்பி
னையும் காதலியாகிய நீ எய்திய துன்பத்தினையும் அயலார்கூறும் பழிப்புரையினையுங் கேட்டு
ஏக்கமுற்று, போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த மாதவி தன் துறவும்
கேட்டாயோ தோழீ - போதி மரத்தின் நிழலிடத்துள்ள முனிவர்முன்னர் புண்ணியத்தையும்
தரும தானத்தையும் செய்த மாதவியின் துறவையும் தோழீ கேட்டனையோ, மணிமேகலை துறவும்
கேட் டனையோ தோழீ - அவள் மகள் மணிமேகலையின் துறவினையும் தோழீ கேட்டனையோ;
ஏச்சுரை
- கோவலனிறந்ததற்கும் கண்ணகி துயருழந்தமைக் கும் இவளே காரணமாவாள் என்னுமுரை. மாதவி
துறவு பூண் டமை, 1 "கோவல னிறந்தபின்
கொடுந்துய ரெய்தி, மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்" என்பதனாலறியப்படும். மாதவர்
- அறவண வடிகள்..
|