"தென்னவன்
. . . வம்மெல்லாம்"
தென்னவன் தீது இலன் தேவர்கோன்
தன் கோயில் நல்விருந்து ஆயினான் - பாண்டியன் குற்றமுடையனல்லன் ஆகலான் அவன் இந்திரன்
கோயிற்கண்ணே நல்ல விருந்தினன் ஆயினான், நான் அவன்றன் மகள் - நான் அப் பாண்டியன்
புதல்வி யாவேன், வென்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் - வென்றி வேலினை
யுடையோனாய முருகனது மலையின்கண் விளையாடலை யான் ஒழியேன், என்னோடும் தோழிமீர்
எல்லீரும் வம்மெல்லாம் - தோழிமீர் நீவிர் யாவிரும் என்னுடன் வாரீர்;
1 "எம்முறு துயரஞ் செய்தோ ரியாவதுந்,
தம்முறு துயரமிற் றாகுக வென்றே, விழுவோ ளிட்ட வழுவில் சாபம்" பட்டமையான் தென்னவன்
றீதிலன் என்றாள். கோயில் - இந்திரன் இருக்கை. மக்கள் யாக்கையிற் கொண்ட வெகுளி
யடங்கிக் கடவுள் யாக்கை பெறுதற்குக் காரணமாயினான் என்பது கொண்டு. நான் அவன் மகள்
என்றாள். வம் - வம்மின். எல்லாம் - எல்லீரும்; அடுக்காகக் கொள்க; பின் வருவனவும்
இன்ன.
|