7. வரந்தரு காதை




110

வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தேன்
உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்

வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன்
எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ



108
உரை
111

       வருபுனல் வையை வான்துறைப் பெயர்ந்தேன் - இடையறாது வருநீரினை யுடைய வையை யாற்றின் பெரிய துறையினின்றும் மீண்ட யான், உருகெழு மூதூர் ஊர்க் குறு மாக்களின் வந்தேன் கேட்டேன் மனையில் காணேன் - அழகு மிக்க நகரத்து இளையோரால் இக்கொடுஞ் செயலைக் கேள்வியுற்று இல்லம் புக்கேன் ஆண்டு நின்னைக் கண்டிலேன், எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ - எம் தந்தை போல்வாய் இளம் பருவமுடையாய் அங்ஙனமாய நீ யாண்டுச் சென்றொளித்தனையோ ;

       பெயர்ந்தேன் வந்தேன் கேட்டேன் என்பன முற்றெச்சங்கள். கேட்டேன் வந்தேன் என மாறுக. எந்தாய் என்றது கோவலனை. இது மாதரி கூற்று.