7. வரந்தரு காதை





135

ஆயர் முதுமக ளாயிழை தன்மேல்
போய பிறப்பிற் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்

சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்



132
உரை
135

       ஆயர் முது மகள் ஆயிழைதன்மேல் போய பிறப்பில் பொருந்திய காதலின் - இடையர் குலத்து முதியளாகிய மாதரி கண்ணகியிடத்து முந்தைப் பிறவியிற் பொருந்திய அன்பு காரணமாக, ஆடிய குரவையின் - தான் ஆடிய குரவையின் பயத்தால், அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள் - அராவணையில் பள்ளி கொண்டோனுக்குத் தொண்டு செய்யும் குடும்பத்தானது புதல்வியாயினள் ; ஆதலால் ;

       ஆயிழை - கண்ணகி, அரவணைக் கிடந்தோன் என்றது திருவனந்தபுரத்துத் திருமாலை. காதலானும் குரவையானும் சிறுமகளாயினளென்க. ஆதலால் என ஒரு சொல் வருவிக்க.