|
25
|
வருகவென் மடமகள் மணிமே கலையென்
றுருவி லாள னொருபெருஞ் சிலையொடு
விரைமலர் வாளி வெறுநிலத் தெறியக்
கோதைத் தாமங் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறம் படுத்தனள்
|
|
வருக
என் மடமகள் மணிமேகலை என்று - என் இளமகள் மணிமேகலை என்னிடம் வருவாளாகவென்று அழைத்து,
உருஇல் ஆளன் ஒரு பெரும் சிலையொடு விரைமலர் வாளி வெறு நிலத்து எறிய - அநங்கன் தனது
ஒப்பற்ற பெரிய வில்லுடனே மணந் தங்கும் மலர் அம்புகளையும் வறிய நிலத்தின்கண் எறிந்து
செயலறும் வண்ணம், கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்து அறம்படுத்தனள்
- ஒழுங்குபட்டமாலையைக் கூந்தலோடே நீக்கிப் புண்ணியதானஞ் செய்து துறவறத்துப் படுத்தாள்
;
உருவிலாளன் - மன்மதன். அவளாற் பலரையும்
வெல்ல நினைத்த அவன், அவள் துறவுபூண்டமையான், தன் வில்லம்புகளை வெறுநிலத் தெறிந்தான்
என்க. புத்த சமயத்துத் துறவு பூணும் மகளிரும் குழல் களைதல் மரபுபோலும் ; அன்றேல் குழலினின்றுங்
களைந்தென்னல் வேண்டும் ; முன்னரும், 1"கோதைத்
தாமங் குழலொடு களைந்து, போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்" என்றார்.
|
1.
சிலப். 27 :
|
|