2. மனையறம்படுத்த காதை

65 பல்லிருங் கூந்தற் சின்மல ரன்றியும்
எல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல்


65
உரை
66

       பல் இருங் கூந்தற் சின்மலர் அன்றியும் - பலவகைத்தாகிய கரிய கூந்தலில் மங்கலமாகச் சில மலரைப் பெய்த லன்றியும், எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல் - ஒளியுடைய அவிழ்கின்ற மாலையைப் புனைதற்கு அம் மாலையோடு அவர்கள் என்ன உறவுடையார்களோ ;