2. மனையறம்படுத்த காதை

நானம் நல்லகில் நறும்புகை யன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொல


67
உரை
68

       நானம் நல் அகில் நறும்புகை அன்றியும் - அவர், கூந்தற்கு நாற்றமுடைய நல்ல அகிற்புகையை ஊட்டுதலன்றியும், மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் - மான்மதச் சாந்தை அணிதற்கு அதனோடு தமக்குளதாகிய கண்ணோட்டம் யாதோ ;

       நானம் - நெய்யுமாம். மான்மதம் - கத்தூரி, வந்ததை - பொருந்திய கண்ணோட்டம் ; வந்த உறவு எனலுமாம்.