2. மனையறம்படுத்த காதை

75 அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே


75
உரை
76

       அரும்பெறல் பாவாய் - பெறுதற்கரிய பாவையே, ஆர் உயிர் மருந்தே - அரிய உயிரை நிலைபெறச் செய்யும் மருந்தே, பெருங்குடி வாணிகன் பெருமடமகளே - பெருங் குடிப் பிறந்த வணிகனுடைய பெருமை பொருந்திய மடப்பத்தை யுடைய புதல்வியே,

       காட்சியின் உயிர் மயக்குறுதலிற் கொல்லியற் பாவாய் என்றும், அவ்வாறு அழியுமுயிரை இமைப்பிற் றருதலின் ஆருயிர் மருந்தே என்றுங் கூறினான். உயிர் மருந்து - மிருத சஞ்சீவினி என்பர்.