2. மனையறம்படுத்த காதை




30
சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி

முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும்
கதிரொருங் கிருந்த காட்சி போல


28
உரை
31

       (சுரும்புணக் கிடந்த ..... காட்சி போல) சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கை - சுரும்புகள் உண்ணும் படி பரப்பிய நறிய பூக்களை யுடைய சேக்கைக்கண்ணே, முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல - முற்றிய கடலையுடைய ஞாலம் முழுவதையும் விளக்கும்

          ஞாயிறும் திங்களும் சேர இருந்த காட்சிபோல இருந்து, கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி - கரும்பு வல்லி என் பனவற்றைப் பெரிய தோளிலே யெழுதி,

          சுரும்புகளுண்டற்குப் பரப்பி வைத்தாற்போலக் கிடந்த நறும் பூஞ் சேக்கை யெனலுமாம், முதிர்தல் - சூழ்தலுமாம். கதிர் - வெங்கதிராகிய ஞாயிறும் தண்கதிராகிய திங்களும். ஒருங்கிருத்தல், இல்பொருளுவமம். போல இருந்து என ஒரு சொல் வருவிக்க. கரும்பும் வல்லியும் சந்தனக் குழம்பால் எழுதப்படுவன.

          [அடி. கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமே லெழுதி என்பதாயிற்று.]