2. மனையறம்படுத்த காதை





45
அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதோர் பண்புண் டாகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்

இருகரும் புருவ மாக வீக்க


42
உரை
45

       அடையார் முனையகத்து அமர் மேம்படுநர்க்குப் படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் - பகைவர் முனையிடத்தே போரினை மேம்படுப்பார் சிலர்க்குப் படைக்கலம் வழங்குவதோர் முறைமை அரசர்க் குண்டாதலின், உருவி லாளன் ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவமாக ஈக்க - அனங்கன் போர் செய்தற்கு எடுத்த பெரிய கரும்புவில் ஒன்றையும் நினக்குக் கரிய இரு புருவமாகத் திருத்தித் தரக்கடவன் ;

       'ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம் என்றது சேமவில்லையுங் கூட்டி' என அடியார்க்கு நல்லார் கூறினர் ; பின், வேலொன்று கண்ணிரண்டா ஈத்தது என வருதலின், இதனையும் அவ்வாறு கோடல் பொருந்தும். மற்றும் அவர், 'முனிவராகிய முரட் பகையை அழித்தற்கு வல்வில்லே வேண்டுதலின், ஒரு பெருங் கருப்புவில் லென்றார்' என்று கூறியதும் ஈண்டைக்குப் பொருந்துவ தன்று ; காமவேள் தன்னுடன் செய்யும் போரில் அவற்கு வென்றி தருவாளாகக் கொண்டு இங்ஙனங் கூறினானென்க.