[இசையாசிரியன்
அமைதி]
யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு - யாழ்ப்பாடலும் வங்கியப்
பாடலும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் மந்தமாகிய சுரத் தினையுடைய தண்ணுமையும்
கூத்துக்களும் வல்லனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து -- இவற்றுடனே சேரச்
செய்த உருக்களை இசை கெள்ளும்படியும் சுவை பொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லனாய்,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி - செந்துறை வெண்டுறை என்னும் இருவகைப்பட்ட
பாடல்களுக்கும் பொருளான இயக்கம் நான்கினையும் அமைத்து, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து
- அழகுடைய தேசாந்தரங்களின் பாடைகளையும் அறிந்து, தேசிகத் திருவின் ஓசை யெல்லாம்
ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி - அந்தப் பாடைகள் இசைபூணும் படியையும் அறிந்து. கவியது
குறிப்பும் ஆடற்றொகுதியும் பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை - இயற்புலவன் கருத்தும்
நாடகப் புலவன் ஈடுவரவுகளும் அவற்றுக் கடைத்த பாடல்களும் தம்மிற் சந்திப்பிக்கு மிடத்து,
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் - குற்றந் தீர்ந்த நூல்வழக்காலே வகுக்கவும்
விரிக்கவும் வல்லனாயுள்ள, அசையா மரபின் இசையோன்தானும் - தளராத இயல்பினையுடைய
இசைப்புலவனும் ;
|