(ஈரேழ்தொடுத்த...புலமை யோனுடன்)
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் பொலியக் கோத்த புலமையோனுடன் - வலிவும் மெலிவும் சமனும் விளங்கவும் நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின குன்றாமலும் எழுத்துக்களால் இசைசெய்ய வல்ல யாழாசிரியனும்;