3. அரங்கேற்று காதை


85
படுமலை செவ்வழி பகரரும் பாலையெனக்
குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின்

84
உரை
85

        படுமலை செவ்வழி அரும்பாலை எனக் குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் - கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலையும் துத்தம்குரலாகச் செவ்வழிப் பாலையும் குரல் குரலாக அரும்பாலையும் என முறையே திரிந்தபின்,

       குரல் குரலாக என்பது ஒன்றொன்றாக என்பதுபோல் நின்ற அடுக்கு. தற்கிழமை -- முறை நிரனிறை.