3. அரங்கேற்று காதை

90 இணைநரம் புடையன அணைவுறக் கொண்டாங்கு

90
உரை
90

        இணை நரம்புடையன அணைவுறக் கொண்டு ஆங்கு - முதலும் இறுதியுமாக வுள்ள நரம்புகளைப் பொருந்தக் கொண்டு,

       
இணைநரம்பு - முதலும் இறுதியுமாகவுள்ள நரம்பு; உழை முதற் கைக்கிளை யிறுதியும், கைக்கிளை முதல் துத்தம் இறுதியும், இவ்வாறே ஏனையவும் முதலும் இறுதியுமாகி யென்க; இரட்டித்த நரம்பு என்றலுமாம். உழை, கைக்கிளை, துத்தம், குரல், தாரம், விளரி, இளியென இடமுறையால் ஒவ்வொன்றும் குரலாகச் செம்பாலை முதலாயின தோன்றினமை அறியற்பாற்று. இவ்வேழு பண்களும் பிற முறையால் உண்டாவன வேனிற் காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அறியப்படும்.