|
4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை
|
10
|
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
|
|
கறை
கெழு குடிகள் கைதலை வைப்ப - இறை செலுத் துதற்குப் பொருந்தியுள்ள குடிகள் துயரமுற, அறைபோகு
குடிகளொடு ஒரு திறம் பற்றி - அங்ஙனம் இறை செலுத்தாது கீழறுத்தல் செய்யும் குடிகளை ஒரு
தலையாகப் பற்றி, வலம்படு தானை மன்னர் இல்வழி - வெற்றி பொருந்திய சேனையையுடைய
வேந்தர் இல்லாத இடமறிந்து, புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் - அவர் நிலமெல்லாம்
கெடும்படி புதிதாக வந்து தங் கிய குறுநில மன்னர்போல,
கறை - கடமை ; வரி. துயருற என்பதனைக்
கைதலை வைப்ப என்பதனாற் குறிப்பிட்டார். விருந்தின் மன்னர் குடிகொன்றிறை கொள்வாராகலின்
வரி செலுத்துங் குடிகள் துயருறுவாரென்க. அறை போதல் - கீழறுத்தல் ; உட்பகையாய்ப் பகைவர்க்கு
உதவி செய்தல். ஒடு -- ஐ. இல்வழி - இல்லாதவிடம் ; ஈண்டுக் காலத்தை உணர்த்தி நின்றது.
குறுநில மன்னரை விருந்தின் மன்னர் என்ற மையால் தானை மன்னர் தொன்றுதொட்டு வருவோர்
என்பதா யிற்று. |
|