''கூடினார்......கங்குற்
பொழுது''
கூடினார்பால் நிழலாய் நட்பாய்ச் சேர்ந்தவர்பால்
நிழலாகியும், கூடார்பால் வெய்யதாய் - பகையாய்ச் சேராதவர்பால் வெய்ய தாகியுமுள்ள,
காவலன் வெண்குடைபோல் - சோழ மன்ன னுடைய வெண்கொற்றக் குடையைப்போல், போது அவிழ்க்கும்
கங்குற்பொழுது - பூக்கள் இதழ்களை விரிக்கும் இராப் பொழுதில், வான் ஊர் மதி விரிந்து
- வானிலே ஒளிவிரிந்து செல்லும் திங்கள், கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் - கோவலனைக்
கூடிய மாதவிக்கும் அவனைப் பிரிந்த கண்ணகிக்கும், காட்டிற்று - முறையே தண்ணிதாயும்
வெவ்விதாயும் தன்னைக் காட்டிற்று.
உவமைக்கண், கூடினார், கூடார் என்பன முறையே
நண்பர், பகைவர் என்னும் பொருளன. கூடிய மாதவி யென்றமையால், பிரிந்த கண்ணகி யென்பது
பெற்றாம். ஏ, அசை,
அந்திமாலைச்
சிறப்புச் செய் காதை முற்றிற்று.
|