(காதலர்ப் பிரிந்த
........ புலம்புமுத் துறைப்ப)
காதலர்ப் பிரிந்த மாதர் - தம் காதலரைப்
பிரிந்த மாதர்கள், நோதக - கண்டார்க்கு வருத்தமுண்டாகும்படி, ஊது உலைக் குருகின்
உயிர்த்தனர் ஒடுங்கி - உலையின்கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்குப்போல அழலெழ உயிர்த்தனராய்
ஒடுங்கி, வேனிற் பள்ளி மேவாது கழிந்து - இவ் விளவேனிற் காலத்திற் கமைந்த நிலாமுற்றத்தில்
மேவாது கழிந்து, கூதிர்ப் பள்ளி - கூதிர்க்காலத்திற் கமைந்த இடை நிலத்திலே, குறுங்கண்
அடைத்து - தென்றலும் நிலவும் புகாமற் குறிய சாளரக் கண் களை யடைத்து, மலயத்து ஆரமும்
மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த - பொதியிலில் உண்டாகிய சந்தனமும்
அழகிய முத்தின் கோவையும் பரந்த முலையினை யுடைய மார்பில் அடையப்பெறாது வருந்தவும்,
தாழிக் குவளை யொடு தண் செங்கழுநீர் வீழ் பூஞ் சேக்கை மேவாது கழிய - தாழியில்
மலர்ந்த குவளையும் செங்கழுநீரும் முதலிய குளிர்ந்த மலர்கள் தாம் விரும்பிய பூஞ்சேக்கையில்
மேவப் பெறாது வருந்தவும், துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த இணை அணை மேம்படத்
திருந்து துயில் பெறாஅது - தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப் புணர்ச்சியான்
உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரைத் திணித்த இணைத்தல் பொருந்திய அணையின் மீதே
திருந்திய துயிலைப் பெறாமல், உடைப்பெருங் கொழுந ரோடு ஊடற் காலத்து - தம்மையுடைய
கணவரோடு முன்பு ஊடிய காலத்து, இடைக்குமிழ் எறிந்து - இடைநின்ற குமி ழினை யெறிந்து,
கடைக்குழை ஓட்டி - கடை நின்ற குழையைத் துரந்து, கலங்கா உள்ளம் கலங்கக் கடை சிவந்து
- அவரது கலங்காத நெஞ்சமும் கலங்கும்படி கடை சிவந்து, விலங்கி நிமிர் நெடுங்கண்
- குறுக்கிட்டுப் பிறழும் நெடிய கண்கள், புலம்பு முத்து உறைப்ப - தனிமையாலே கண்ணீர்த்
துளியைச் சிந்த.
கண்ணகியும் ஏனைக் காதலர்ப் பிரிந்த
மாதரு மென்க. குருகு - துருத்தி ; ஊதுலைக் குருகு என்றது வெளிப்படை. முத்தாகிய ஆர மும்
எனலுமாம். ஆகத்து முலையென மாறினும் அமையும். தாழி யுள்ளே குவளையை வைத்து வளர்ப்பர்
; 1"தாழியுண்
மலர்ந்த தண் செங் குவளை '' என்பது காண்க. வீழ்தல் - விரும்புதல், மேவாது - பள்ளித்தாமமாய்
மேவப்பெறாமல் என்றுமாம். கழிய - வருந்த வென்னும்பொருட்டு. தூவி - அடிவயிற்றின்
மயிர். இணையணை- இணைதலையுடைய பலவாகிய அணை ;
2
"இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட்
டுணைபுண ரன்னத்தின் றூவிமெல் லணையசை''
என்றார் பிறரும். திருந்து துயில் - கணவர்
மார்பிலே துயிலும் களித்துயில். கலங்காவுள்ளம் என்றார், 3பெருமையும்
உரனும் ஆடூஉ மேன '' என்பவாகலின். புலம்பு முத்துறைப்ப - உவகைக் கண்ணீர் சிந்தாது
துன்பக் கண்ணீர் சிந்த என்றுமாம். குமிழம் பூவும் முத்தும் மூக்கிற்கும் நீர்த்துளிக்கும்
உவமை. உறைப்ப - உகுப்ப.
|