5. இந்திரவிழவூரெடுத்த காதை

37 அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு


37
உரை
38

        பெரும்பாண் - பாணரில் ஒரு பிரிவினர் ; பெரிய இசைகாரர் என்பாருமுளர். பிறர்வினையாளரொடு பெரும்பாணரும் என்க.

        யவனரிருக்கையும், இலங்குநீர் வரைப்பும், நகரவீதியும், காருகரிருக்கையும், நனந்தலை மறுகும், கூலவீதியும், காழியர் முதல் ஓசுநர் ஈறாகச் செறிந்த இருக்கையும், கஞ்சகாரர் முதலாகப் பெரும்பாணர் ஈறாக இருக்குமிடங்களும் விளங்கும் மருவூர்ப்பாக்கம் எனக.