கூனும் குறளும் ஊமும் செவிடும் - கூனரும் குறளரும் ஊமரும் செவிடரும், அழுகு மெய்யாளரும்
- தொழு நோயால் அழுகிய உடம்பினை யுடையோரும், முழுகினர் ஆடி -
முழுகி நீராடிய வளவில், பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று - பழுதில்லாத தோற்றத்தையுடைய
நல்ல உருவத்தைப்பெற்று, வலம் செயாக் கழியும் - வலஞ்செய்து தொழுது நீங்கும், இலஞ்சி
மன்றமும் - பொய்கையையுடைய மன்றமும் ;
|