வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர் - வஞ்சனையாற் சிலர் மருந்தூட்ட உண்டு பித்தேறினாரும்,
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் - நஞ்சை உண்டு நடுங்கும்படியான துன்பமுற்றோரும்,
அழல்வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் - அழலும் விடத்தையுடைய பாம்பின் கூரிய எயிறு
அழுந்தக் கடியுண்டாரும், கழல் கண் கூளிக் கடுநவைப்பட்டோர் - பிதுங்கின கண்ணையுடைய
பேயினாற் கடுந்துன்ப முண்டாகப் பற்றப்பட்டோரும், சுழலவந்து தொழ - ஒருகாற் சூழ வந்து
தொழுத வளவிலே, துயர் நீங்கும் - அத் துயர்கள் நீங்குதற்குக் காரணமாகிய, நிழல்
கால் நெடுங்கல் நின்ற மன்றமும் - ஒளியைச் சொரியும் நெடிய கல்நாட்டி நிற்கும் மன்றமும்
;
வஞ்சமுண்டு - வஞ்சனைப்பட்டு என்றுமாம்.
மயல் - மருள் ; பித்து. மயலாகிய பகை யென்க. அழல் - அழல் போலும் நஞ்சு. ஆர் -
கூர்மை. கழற்கண் என்பதன் விகாரமாகக் கொண்டு பச்சைக் கழல் போலும் கண் என்றலுமாம்.
நவை - துன்பம். சுழல - சூழ.
|