5. இந்திரவிழவூரெடுத்த காதை

135 அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப்
பாவைநின் றழூஉம் பாவை மன்றமும்

135
உரை
138

        அரைசு கோல் கோடினும் - அரசனது செங்கோல் சிறிது வளைந்ததாயினும், அறம்கூறு அவையத்து உரை - தரு மாசனத்தார் வழக்குரைக்கும் அவையத்தில் அவர் உரைக்கு முரை, நூல்கோடி ஒரு திறம்பற்றினும் - நேர்மை திரிந்து ஒரு பக்கம் பற்றினும், நாவொடு நவிலாது - நாவாற் கூறாமல், நவை நீர் உகுத்துப் பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் - துன்
பக் கண்ணீர் சொரிந்து அழுதலையுடைய பாவை நிற்கும் பாவை மன்றமும் ; (ஆகிய),

        நூல் - ஒழுங்கு. ஒரு திறம் பற்றல் - வாரம் பற்றல். நாவொடு- நாவால். நவைநீர் - குற்றத்துக்காகச் சொரியும் நீருமாம். பாவை நிற்றலாற் பாவை மன்றமெனப் பெயரெய்திற்று.