5. இந்திரவிழவூரெடுத்த காதை

145 தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து

145
உரை
146

        தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து - பூமியிற் றங்கிய முறையையுடைய கற்பகம் நிற்குங் கோயின் முன்னர் மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து - அட்டமங்கலத்தோடு நெடிய கொடியை வானிலே செல்ல எடுத்து ;

        இந்திரன் தனது நிழலிற் றங்கிய செருக்கை யுடைய தரு வென்றுமாம். தரு - கற்பகத் தரு. கொடி - அயிராவதம் எழுதிய கொடி.