மரகதமணியொடு வயிரம் குயிற்றி - மரகதம் வயி ரம் என்னுமிவற்றை விளிம்பிலே ஆயப்
பலகையாகப் படுத்து, பவளத் திரள் கால் - அதன்மீதே செம்பவளத் தூண்களை நிரைத்த,
பைம்பொன் வேதிகை - பசும்பொன்னா லாகிய திண்ணைகளையுடைய, நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து
யாங் கணும் - நெடிய நிலைகளையுடைய மாளிகைகளின் வாயிலிடம் தோறும், கிம்புரி - கிம்புரி
செறித்த கொம்பினையும், பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து - அங்காந்த வாயாற் கான்ற
பருமுத் தொழுங்கினையுமுடைய, மங்கலம் பொறித்த - அட்டமங்கலங் களையும் பொறித்த,
மகரவாசிகைத் தோரணம் - வாசிகை வளை வாக வளையச் செய்த மகர தோரணங்கள், நிலைஇய
- நிலை பெற்ற, தோம்அறு பசும்பொற் பூரண கும்பத்து - குற்றமற்ற பசிய பொன்னாற்
செய்த நிறை குடமும், பொலிந்த பாலிகை - பொலிவுபெற்ற முளைப்பாலிகையும், பாவை விளக்கு
- பாவை விளக்கும், பசும்பொற் படாகை - பசும் பொன்னாலாய கொடி யும், தூமயிர்க்
கவரி - வெள்ளிய மயிரையுடைய சாமரையும், சுந்தரச் சுண்ணத்து - அழகிய பொற்சுண்ணத்துடனே,
மேவிய கொள்கை வீதியில் - பொருந்திய இயல்பினையுடைய வீதியிலே, செறிந்து ஆங்கு
- நெருங்கி.
குயிற்றிய என்னும் பாடத்திற்கு
வயிரங் குயிற்றிய காலை யுடைய வேதிகை என்க. கிம்புரி - கொம்பிலணியும் பூண். வாசிகை
- வளைத்த மாலை; திருவாசியுமாம். கிம்புரியையும் முத்தொழுக்கத்தையு முடைய மகர தோரணம்
நிலைபெற்ற வீதியெனவும், பூரண கும் பம் முதலியன மேவிய வீதி யெனவும் தனித்தனி கூட்டுக.
கிம்புரிப் பகுவாய் - மகரவாய் என்பது அரும்பதவுரை. பாவை விளக்கு - பாவை நின்று ஏந்திய
விளக்கு. பாலிகை, பாவை விளக்கு என்ப வற்றோடும் பசும்பொன் என்பதனைக் கூட்டுக.
படாகை - கொடி. ஆங்கு , அசை.
|