பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் - தாய்வயிற்றுப் பிறவாத திருமேனியை யுடைய
மாதேவனாகிய இறைவன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயி லும் - ஆறுமுகத்தையும்
செய்ய நிறத்தையுமுடைய முருக வேளின் அழகு விளங்குகின்ற கோயிலும், வால்வளை மேனி வாலியோன்
கோயிலும் - வெள்ளிய சங்கு போலும் நிறத்தை யுடைய பலதேவன் கோயிலும் - நீல மேனி
நெடியோன் கோயி லும் - நீலமணி போலும் நிறத்தையுடைய நெடிய மால் கோயி லும், மாலை
வெண்குடை மன்னவன் கோயிலும் - முத்துமாலை யணிந்த வெண் கொற்றக் குடையையுடைய இந்திரன்
கோயி லும் ஆகிய இவற்றில், மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ- மிக்க முதுமையையுடைய
இறைவனது வாய்மையிற் றப்பாத, நான்மறை மரபின் தீமுறை ஒருபால் - நாலாகிய வேதங்கள்
சொல்லிய நெறியே ஒரு பக்கம் ஓமங்கள் நடக்க;
பிறவா யாக்கை என விசேடித்தமையால்
உயிரியல்பாகிய பிறப் பிறப்பில்லாதவன் இறைவன் ஒருவனே யென்பது பெற்றாம். அவன்
யாவர்க்கும் தாயும் தந்தையு மாதலன்றி அவனுக்கோர் தாய் தந்தை யின்மையைத் 1
"தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி"
என்பதனானுமறிக. யாக்கை - அருளாற் கொள்ளுந் திருமேனி ; யாக்கையிற் பிறவாத பெரியோன்
எனினுமமையும். வாலியோன் வெண்ணிறமுடையோன் : ஈண்டுப் பெயர் மாத்திரையாய் நின்றது.
மாமுது முதல்வன் - சிவபிரான் ; 2 "முன்னைப்
பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருள்"
ஆதலின் மாமுது முதல்வன் என்றார். வாய்மையின் வழா என்ப தற்கு வாயினின்றும் நீங்காத
என்றுரைத்தலுமாம். 3 "நன்றாய்ந்த நீணிமிர்சடை,
முதுமுதல்வன் வாய் போகா, தொன்று புரிந்த வீரி
ரண்டின், ஆறுணர்ந்த வொருமுது நூல்" என்பதுங் காண்க. முது முதல்வன் - பிரமன் என்பாருமுளர்
1. திருவாசகம்,
சாழல், 3. 2.
திருவெம். 9. 3 புறம், 166.
|